மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட அரபா நகர் கிராமத்தில் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலயம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலை ஆரம்பிப்பதற்கான சகல முயற்சிகளையும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்புத் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் முயற்சியால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அரபா நகர் கிராமத்தில் மர்ஹூம் முன்னாள் அமைச்சர் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பெயரில் ஒரு பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இப்பாடசாலையானது ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் 27வது பாடசாலையாக அமையப்பெற்றுள்ளதமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு